பராமரிப்புப் பணி: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

செங்கல்பட்டு: பராமரிப்புப் பணி காரணமாக  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன.  இகுள்ள முதல் அலகில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல்  மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது. 8 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி … Read more

Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலுக்கிய நிலநடுக்கம்

நேற்று ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிற்கு அருகே இருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் | ஆப்கானிஸ்தான் இந்த நிலநடுக்கத்தை லட்சக்கணக்கான மக்கள் உணர்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கிற நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் … Read more

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் பயன் தராது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

திருப்புவனம்: சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு 6 மாதங்​களே உள்ள நிலை​யில், முதல்​வரின் வெளி​நாட்​டுப் பயணம் பயன் தராது என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீஸ் விசா​ரணை​யில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மாரின் குடும்​பத்தை சந்​தித்து ஜி.கே.​வாசன் ஆறு​தல் கூறி​னார். மாநில தொண்​டரணித் தலை​வர் அயோத்​தி, முன்​னாள் எம்​எல்ஏ உடையப்​பன், மாவட்​டத் தலை​வர்​கள் பாலசுப்​பிரமணி​யன், ராஜலிங்​கம், கவுன்​சிலர்​கள் பாரத்​ராஜா, வெங்​கடேஸ்​வரி உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். முன்​ன​தாக, செய்​தி​யாளர்​களிடம் ஜி.கே.​வாசன் கூறிய​தாவது: உங்​களு​டன் ஸ்டா​லின் … Read more

ராகுல் பின்னால் நிற்க மம்தா விரும்பவில்லை: ஆதிர் ரஞ்சன் சவுத்திரி குற்றச்சாட்டு

கொல்கத்தா: பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிஹாரில், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்கிறார். பிஹாரில் இன்று இறுதியாக நடைபெறும் யாத்திரையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் யூசப் பதான், லலித்தேஷ் திரிபாதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியதாவது: பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுலுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவராக இருக்க … Read more

இந்தியாவில் F1? நடிகர் அஜித்குமார் சொன்ன முக்கிய தகவல்!

நடிகர் அஜித் தற்போது நடிப்பை ஓரம் தள்ளிவிட்டு கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது.

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி! நள்ளிரவு வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது சுங்கக்கட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம் – தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது! ஜெர்மனியில் முதல்வர் பேச்சு…

சென்னை: உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம் – தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள் என ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக 5வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முறை, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி சென்ற முதல்வரை, அமைச்சர் டிஆர்பி ராஜா பூங்கொத்து கொடத்து … Read more

ரமோன் மக்சேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின் சாதனைகள் என்னென்ன?

ஆசியாவின் மிக உயரிய குடிமைப்பணி மற்றும் சமூக சேவைக்கான விருதாகக் கருதப்படும் ரமோன் மக்சேசே விருதைப் பெறும் முதல் இந்திய NGO என்ற பெருமையைப் பெற்றுள்ளது ‘Educate Girls’ என்ற அமைப்பு. இது தொலைதூர கிராமங்களில் பள்ளி செல்லாத சிறுமிகளுக்காக சஃபீனா ஹுசைன் என்பவரால் நிறுவப்பட்டது. தற்போது 52 வயதாகும் இவர், 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார். Safina Husain ஹுசைன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ … Read more

பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐக்கியமாகிறதா தேமுதிக? – தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் என தகவல்

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் தேமு​திக சேர உள்​ள​தாக​வும், அதற்​கான தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தைகள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது. தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் தேமு​திக இடம் பெற்​றிருந்​தது. அப்​போது தேமு​தி​க​வுக்கு 5 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இதுத​விர ஒரு மாநிலங்​களவை இடமும் வழங்​கப்​படு​வ​தாக தேமு​தி​க​வுக்கு உறுதி அளிக்​கப்​பட்​டது. ஆனால் ஒப்​பந்​தத்​தின்​படி, சமீபத்​தில் நடை​பெற்ற மாநிலங்​கள​வைத் தேர்​தலில் தேமு​தி​கவுக்கு அதி​முக இடம் ஒதுக்​க​வில்​லை. அதே​நேரம் அடுத்தாண்டு நடை​பெறவுள்ள தேர்​தலில் இடம் வழங்​கு​வ​தாக அதி​முக … Read more

சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

புதுடெல்லி: மத்​திய ஊழல் தடுப்பு ஆணை​யம் சமீபத்​தில் வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சிபிஐ விசா​ரித்த 7,000-க்​கும் மேற்​பட்ட ஊழல் வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றில் 379 வழக்​கு​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன. கடந்​தாண்டு இறு​திவரை உள்ள மொத்த வழக்​கு​களில் 1,506 வழக்​கு​கள் 3 ஆண்​டு​களாக​வும், 791 வழக்​கு​கள் 3 முதல் 5 ஆண்​டு​களாக​வும், 2,115 வழக்​கு​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 2,660 வழக்​கு​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும் நிலு​வை​யில் … Read more