நடிகர் மோகன்பாபு பல்கலைக்கழகத்துக்கு ரூ.15 லட்சம் அபராதம்

திருப்பதி: தெலுங்கு திரை​யுல​கின் மூத்த நடிகர்​களில் ஒரு​வர் மோகன்​பாபு. இவருக்கு சொந்​த​மாக திருப்​பதி அருகே ரங்​கம்​பேட்டை எனும் இடத்தில் மோகன்​பாபு பல்​கலைக்​கழகம் (எம்​பி​யு) உள்ளது.

இங்கு உயர்கல்வி ஒழுங்​கு​முறை மற்​றும் கண்​காணிப்பு ஆணை​யத்​தின் 3 அதி​காரி​கள் குழு கடந்த மாதம் 17-ம் தேதி ஆய்வு செய்​தது. மேலும் மாணவர்​கள், பெற்​றோர்​களிடம் விசா​ரணையை நடத்​தி​யது.

இதையடுத்து மோகன்​பாபு பல்​கலைக்​கழகத்​திற்கு அதிகாரிகள் குழு ரூ.15 லட்​சம் அபராதம் விதித்​தது. மேலும் மாணவர்​களிடம் இருந்து கூடு​தலாக வசூலித்த ரூ.26 கோடியே 27 லட்​சத்து 52,872 பணத்தை 15 நாட்​களுக்​கும் திருப்பி வழங்க வேண்​டும் என உத்​தர​விட்​டது.

அவ்​வாறு வழங்​கப்​பட​வில்லை எனில், மோகன்​பாபு பல்​கலைக்​கழகத்​தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்​டும் என ஆந்​திர மாநில அரசுக்​கும், யுஜிசி, ஏஐசிடிஇ, ஐசிஏஆர் உள்​ளிட்ட தேசிய உயர்​கல்வி அமைப்​பு​களுக்​கும்​ பரிந்​துரை செய்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.