அயோத்தியில் தென்னிந்திய இசை மேதைகளின் சிலை திறப்பு!

அயோத்தி: வட தென்​னிந்​திய கலாச்​சார ஒற்​றுமைக்கு புதிய அடை​யாள​மாக அயோத்​தி​யில் தென்​னிந்​தி​யா​வைச் சேர்ந்த மூன்று துற​வி – இசை மேதைகளின் சிலைகள் திறந்​து​வைக்​கப்​பட்​டன.

தமிழகத்​தைச் சேர்ந்த தியாக​ராஜ சுவாமிகள், அருணாசல கவி மற்​றும் கர்​நாட​காவைச் சேர்ந்த புரந்தரதாசர் ஆகியோர் இசைத் துறைக்கு ஆற்​றிய பங்​களிப்பை கவுரவிக்​க​வும், வட மற்​றும் தென்​னிந்​திய கலாச்​சார சங்​கமத்​தின் அடை​யாளத்தை வெளிப்​படுத்​தும் வித​மாக​வும் அயோத்​தி​யில் அவர்​களுக்கு சிலையை நிறுவ உத்தர பிரதேச அரசு முடி​வெடுத்​தது.

அதன்​படி, அயோத்​தி​யில் தேடி பஜாரில் உள்ள பிரஹஸ்​பதி குண்ட் வளாகத்​தில் நிறு​வப்​பட்​டுள்ள மூன்று தென்​னிந்​திய இசை மேதைகளின் சிலைகளை மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​ ஆகியோர் நேற்று திறந்​து​வைத்​தனர்.

தென்​னிந்​திய சடங்​கு​கள் நிறைந்த இந்த விழா​வில், சீதா​ராமனின் பெற்​றோர்​களும் கலந்து கொண்​டனர்.இசை மேதைகளின் சிலை திறப்பு குறித்து முதல்வர் யோகி ஆதித்​ய​நாத் கூறுகை​யில், “பிரஹஸ்​பதி குண்ட் ஒரு வரலாற்​றுத் தலம் மட்​டுமல்ல, வடக்கு மற்​றும் தென்​னிந்​தி​யா​வின் பக்தி மரபு​களை ஒன்​றிணைக்​கும் கலாச்​சார நல்​லிணக்​கத்​தின் சின்​ன​மாகும்” என்​றார்.

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறியதாவது: அயோத்தி நம்​பிக்​கை​யின் மையம் மட்​டுமல்ல. இந்​தி​யா​வின் கலாச்​சார ஆன்​மா​வின் சின்​ன​மும் கூட. இந்​திய பாரம்​பரிய இசை மற்​றும் பக்தி மரபு​களை உலக அரங்​கில் நிலை நிறுத்​திய பெருமை தியாக​ராஜ சுவாமிகள், அருணாச்சல கவி, புரந்தரதாசர் ஆகிய மூன்று இசை மேதைகளையே சாரும். அவர்​களின் கவிதைகள் மற்​றும் இசையமைப்​பு​கள் சமூகத்தை அன்​பு, பக்தி மற்​றும் ஒற்​றுமையை ஒரே நூலிழை​யில் பின்​னிப்​பிணைத்​தன.

அயோத்​திக்​கும் கர்​நாடகா​வுக்​கும் இடையி​லான கலாச்​சார உறவு பல நூற்​றாண்​டு​கள் பழமை​யானது, இன்​று, இந்த துறவி​களின் சிலைகள் திறப்பு விழா​வின் மூலம், இந்​தி​யா​வின் வடக்​கு-தெற்கு பாரம்​பரி​யம் ஒரே நூலில் இணைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.