டெல்லி: கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது மதியம் 3.15 மணிக்கே திமுக நபர் வலைதளப்பதிவு போட்டுள்ளதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய தவெக தரப்பு வழக்கறிஞர், இந்த பதிவு போட்டவர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இந்த கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மின்சாரம் நிறுத்தப்பட்ட விவகாரம், போலீசார் தடியடி, சம்பவம் குறித்து அரசு மற்றும் செந்தில் பாலாஜியின் […]