ரூ.35,440 கோடி மதிப்பில் 2 வேளாண் திட்டங்கள் தொடக்கம்: விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

புதுடெல்லி: பிரதமரின் தானிய வேளாண் திட்​டம் மற்​றும் தற்​சார்பு பருப்பு உற்​பத்தி திட்​டம் என்ற இரு பெரிய வேளாண் திட்​டங்​களை ரூ. 34,440 மதிப்​பில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். ரூ.5,450 கோடி மதிப்​பில் கால்​நடை வளர்ப்​பு, மீன்​வளம் மற்​றும் உணவு பதப்​படுத்​துதல் திட்​டங்​களை​யும் அவர் தொடங்கி வைத்​தார்.

லோக்​நாயக் ஜெய்​பிர​காஷ் நாராயணின் பிறந்​த நாள் கொண்​டாட்​டத்தை முன்​னிட்​டு, டெல்​லி​யில் உள்ள இந்​திய வேளாண் ஆராய்ச்சி மையத்​தில் சிறப்பு வேளாண் திட்​டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இது குறித்து பிரதமர் அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வேளாண் உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும், பயிர் வகை​களின் உற்​பத்​தியை விரி​வாக்​க​வும், நீடித்த மற்​றும் நிலை​யான வேளாண் முறை​களை பின்​பற்​ற​வும், பஞ்​சா​யத்து மற்​றும் வட்​டார அளவில் அறு​வடை செய்​யப்​படும் பயிர்​களை சேமிக்​க​வும், நீர்ப்​பாசன திட்​டங்​களை விரிவுபடுத்​த​வும், தேர்வு செய்​யப்​பட்ட 100 மாவட்​டங்​களில் நீண்ட கால மற்​றும் குறுகிய கால பயிர்​கடன் வசதி​கள் கிடைக்​க​வும் பிரதமரின் தானிய வேளாண் திட்​டம் ரூ.24,000 கோடி மதிப்​பில் தொடங்கி வைக்​கப்​பட்​டுள்​ளது.

பருப்பு உற்​பத்​தியை மேம்​படுத்​த​வும், பருப்பு உற்​பத்தி செய்​யப்​படும் நிலங்​களின் அளவை விரிவுபடுத்​த​வும், பருப்பு கொள்​முதல், சேமிப்பு மற்​றும் பதப்​படுத்​துதல் ஆகிய​வற்றை மேம்​படுத்​தும் நோக்​கில் ரூ.11,440 கோடி மதிப்​பில் தற்​சார்பு பருப்பு உற்​பத்தி திட்​டத்​தை​யும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்த சிறப்பு வேளாண் திட்​டத்​தில் விவ​சா​யிகளு​ட​னும் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி​னார். வேளாண்​மை, கால்​நடை வளர்ப்​பு, மீன்​வளம் மற்​றும் உணவு பதப்​படுத்​துதல் துறை​களில் ரூ.5,450 கோடிக்கு மேலான திட்​டங்​களை​யும் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். ரூ.815 கோடி மதிப்​பிலான கூடு​தல் வேளாண் திட்​டங்​களுக்​கும் அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

பெங்​களூருவில் செயற்கை கரு​வூட்​டல் பயிற்சி மையம், குஜ​ராத்​தின் அம்​ரேலி மற்​றும் பனாஸ் பகு​தி​யில் சீர்மிகு மையம், ராஷ்ட்​ரிய கோகுல் திட்​டத்​தின் கீழ் அசாமில் செயற்கை கரு​வூட்​டல் பரிசோதனைக் கூடம், மெஹ்ச​னா, இந்​தூர் மற்​றும் பில்​வாரா பகு​தி​யில் பால் பவுடர் தயாரிப்பு மையங்​கள், அசாம் தேஸ்​பூரில் மீன் உற்​பத்தி நிலை​யம், வேளாண் பொருட்​கள் பதப்​படுத்​துதல் மையங்​கள், குளிர்​சாதன கிடங்​கு​கள், மற்​றும் மதிப்​பு​கூட்டு கட்​டமைப்​பு​களை​யும் பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார்.

ஆந்​தி​ரா​வின் கிருஷ்ணா​வில் ஒருங்​கிணைந்த குளிர்​சாதன கிடங்​கு, மதிப்பு கூட்டு கட்டமைப்​பு, உத்​த​ராகண்​டில் நன்னீர் மீன் வளர்ப்​பு, நாகாலாந்​தில் ஒருங்​கிணைந்த மீன் வளர்ப்பு பூங்​கா, புதுச்​சேரி காரைக்​காலில் ஸ்மார்ட் மற்​றும் ஒருங்​கிணைந்த மீன்​பிடி துறை​முகம், ஒடி​சா​வின் ஹிராகுட் நகரில் ஒருங்​கிணைந்த மீன் பண்ணை ஆகிய​வற்​றுக்​கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்​கல் நாட்​டி​னார்.

இயற்கை வேளாண்​மைக்​கான தேசிய திட்​டத்​தின் கீழ் 50,000 விவ​சா​யிகளுக்கு சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. கிராமங்​களில் 38,000 பேருக்​கு, வேளாண் தொடர்​பான செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்ப பயிற்​சி அளிக்​கப்​பட்​டு உள்​ளது. இவ்​வாறு பிரதமர்​ அலு​வல​கம்​ தெரிவித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.