ZOHO Latest News: ஜொஹோ நிறுவனம் அரட்டை செயலி, ஜோஹோ மெயில், ஜோஹொ பே என பல வகைகளில் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவில் உருவான இவை அனைத்தும் இந்த துறைகளில் கொடுகட்டி பறக்கும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வலுவான போட்டியை அளிக்கும் வகையில் திறன் படைத்தவையாக இருப்பதால், இந்திய அரசும் இவற்றை வெகுவாக பிரபலப்படுத்தி வருகின்றது.
Add Zee News as a Preferred Source
ஜோஹோவுக்கு மாறிய மத்திய அரசு ஊழியர்கள்:
ஒரு பெரிய தொழில்நுட்ப மாற்றமாக, பிரதமர் அலுவலக ஊழியர்கள் (PMO) உட்பட கிட்டத்தட்ட 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னஞ்சல் அமைப்பு, ஜோஹோ கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட தளத்திற்கு மாறியுள்ளது. இந்த நடவடிக்கை நீண்டகாலமாக இருந்து வரும் தேசிய தகவல் மைய (NIC) மின்னஞ்சல் சேவைக்கு மாற்றாக இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த மாற்றம் இந்தியாவின் டிஜிட்டல் தன்னிறைவை வலுப்படுத்துவதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். அக்டோபர் 3 தேதியிட்ட உத்தரவில், உள்நாட்டு தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பான, உள்நாட்டு டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது என்ற அரசாங்கத்தின் குறிக்கோளுடன் இணைந்து, ஜோஹோ சூட்டை (Zoho suite) ஏற்றுக்கொள்ளுமாறு மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு பாதுகாப்பு குறைவானதாக கருதப்பட்ட ஓப்பன் சோர்ஸ் டூல்களையும் இந்த தொகுப்பு மாற்றுகிறது.
பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு
NIC மற்றும் CERT-In உடன் கலந்தாலோசித்து தரவு தனியுரிமை மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த கவலைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தரவு ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக மென்பொருள் தர அமைப்புகளால் (SQS) வழக்கமான பாதுகாப்பு தணிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். “முக்கியமான அரசாங்கத் தரவைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்று ஒரு மூத்த அதிகாரி ஒருவர் உறுதியளித்தார்.
இந்த நடவடிக்கைகளை ஆதரித்துள்ள அதிகாரிகள், தரவு பாதுகாப்பு நெறிமுறைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். சாத்தியமான சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இந்தியாவை தளமாகக் கொண்ட தரவு மையங்களின் முழுமையான குறியாக்கம் மற்றும் சுயாதீன தணிக்கைகளின் முக்கியத்துவத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
NIC மாற்றத்தில் ஜோஹோவின் பங்கு
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் 1976 இல் நிறுவப்பட்ட NIC, பல தசாப்தங்களாக அரசாங்க மின்னஞ்சல் உள்கட்டமைப்பை நிர்வகித்து வந்தது. 2023 இல் வழங்கப்பட்ட ஏழு ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், ஜோஹோ இப்போது பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் டொமைன்கள் nic.in மற்றும் gov.in முகவரிகளை தொடர்ந்து பயன்படுத்தும்.
Zoho தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
இந்த மாற்றம் நவம்பர் 2022 இல் நடந்த AIIMS டெல்லி சைபர் தாக்குதலைத் தொடர்ந்து நடந்தது. இது வாரக்கணக்கில் செயல்பாடுகளை சீர்குலைத்து, அரசாங்க டிஜிட்டல் உள்கட்டமைப்பை மறுமதிப்பீடு செய்ய வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து, டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் பிப்ரவரி 2023 இல் பாதுகாப்பான கிளவுட் சேவை வழங்குநருக்கான ஏலங்களை அழைத்தது. இந்த செயல்முறை இறுதியில் Zohoவின் தேர்வுக்கு வழிவகுத்தது.
About the Author
Sripriya Sambathkumar
Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs.
She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.
…Read More