மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​திகளில் இடி, மின்​னலுடன் கூடிய, மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 89.6 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 78.8-80.6 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஆய்வு: சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை தொடரும் நிலையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசர கால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார்.

நாளை வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: தமிழகத்​தில் நாளை (அக். 16) முதல் வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்க வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்​ப​தாவது: தென்​மேற்​குப் பரு​வ​மழை இந்​தி​யப் பகு​தி​களி​லிருந்து நாளை வில​கக்​கூடும். அதே​நேரத்​தில், வடகிழக்​குப் பரு​வ​மழை தமிழகம்​ – புதுச்​சேரி-​காரைக்​கால் பகு​தி​கள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்​நாடகம், ராயலசீ​மா, தெற்கு கடலோர ஆந்​திர பகு​தி​களில் நாளை தொடங்க வாய்ப்​புள்​ளது.

தென்​மேற்கு வங்​கக்​கடல்- பூமத்​திய ரேகையை ஒட்​டிய இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​களில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இது மேற்​கு – வடமேற்கு திசை​யில் குமரிக்​கடல் பகு​தி​களை நோக்கி நகரக்​கூடும். இதன் காரண​மாக வரும் 19-ம் தேதி தென்​கிழக்கு அரபிக்​கடல் மற்​றும் அதையொட்​லட்​சத்​தீவு பகு​தி​களில் கேரள–கர்​நாடக பகு​தி​களுக்கு அப்​பால் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உருவாகக்​கூடும்.

இவற்​றின் தாக்​கத்​தால் தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். கோவை மாவட்​டத்​தின் மலைப் பகு​தி​கள், நீல​கிரி, திண்​டுக்​கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்​கை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, தென்​காசி, திருநெல்​வேலி மற்​றும் கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.