மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்து – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு

கொழும்பு,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 19வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 12.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நின்றபின்னர் ஆட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.