ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்​னாள் துணைவேந்​தர் ஆர்​.வேல் ​ராஜ் மீது எடுக்​கப்​பட்ட சஸ்பெண்ட் நடவடிக்​கையை ரத்​து செய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை நிராகரிக்க பல்​கலைக்​கழக சிண்​டிகேட் பரிந்​துரை செய்​துள்​ள​து.

அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​த​ராக பேராசிரியர் ஆர்​.வேல்​ராஜ் பணி​யாற்​றிய காலத்​தில் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கிய​தில் முறை​கேடு நடந்​திருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இந்​நிலை​யில், அவரது பதவிக்​காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முடிவடைய இருந்த நேரத்​தில் ஒரு நாளுக்கு முன்​பாக தமிழக அரசு அவரை சஸ்​பெண்ட் செய்தது.

இந்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வேல்​ராஜ் ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யிடம் மேல்​முறை​யீடு செய்​தார். இந்​நிலை​யில், அவர் மீது எடுக்​கப்​பட்ட சஸ்​பெண்ட் உத்​தரவை ஆளுநர் ஆர்​.என்​.ரவி ரத்​துசெய்ததுடன் அவரது ஓய்​வுக்​கால பணப்​பலன்​களை வழங்​க​வும் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக சிண்​டிகேட் கூட்​டம் நேற்று முன்​தினம் நடந்​தது. இதில் பல்​கலைக்​கழக நிர்​வாகத்தை கவனித்து வரும் உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்​கர் தலை​மையி​லான கன்​வீனர் குழு​வினர் மற்​றும் சிண்​டிகேட் உறுப்​பினர்​கள் கலந்​து​ கொண்​டனர். அப்​போது, முன்​னாள் துணைவேந்​தர் வேல்​ராஜ் மீதான சஸ்​பெண்ட் உத்​தரவை ரத்​துசெய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை நிராகரிக்க வேண்​டும் என்று சிண்​டிகேட் உறுப்​பினர்​கள் பரிந்​துரை செய்​தனர்.

மேலும், தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களில் போலி பேரா சிரியர் நியமன விவ​காரம் தொடர்​பாக தமிழக அரசு அமைத்த விசா​ரணைக்​குழு தனது அறிக்​கையை சிண்​டிகேட் கூட்​டத்​தில் சமர்ப்​பித்​தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.