ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார்

சண்டிகர்: ஹரி​யாணா​வின் பஞ்ச்​குலா நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு மிட்​ஸ்​கார்ட் மருந்து தயாரிப்பு நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. இந்த நிறு​வனத்​தின் தலை​வ​ராக பாட்​டியா உள்​ளார்.

ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகை​யின்​போதும் தனது ஊழியர்​களுக்கு சொகுசு கார்​களை பரி​சாக வழங்​கு​வதை பாட்​டியா வாடிக்​கை​யாக கொண்​டிருக்​கிறார். கடந்த ஆண்டு தீபாவளி​யின்​போது அவர் 15 பேருக்கு கார்​களை வழங்​கி​னார். இந்த ஆண்டு 51 பேருக்கு அவர் கார்
​களை பரி​சாக வழங்​கி​யிருக்​கிறார். இதுகுறித்து பாட்​டியா நிருபர்​களிடம் கூறிய​தாவது:

எனது மருந்து தயாரிப்பு நிறு​வனத்​தின் முது​கெலும்​பாக ஊழியர்​கள் உள்​ளனர். அவர்​கள் அனை​வருக்​கும் தீபாவளி பண்​டிகை​யின்​போது நிறை​வான போனஸை வழங்​கு​கிறேன். மேலும் மிகச் சிறப்​பாக செயல்​படு​பவர்​களுக்கு கார்​களை பரி​சாக வழங்கி வரு​கிறேன். இதன்​காரண​மாக ஊழியர்​கள் மிக கடின​மாக உழைத்து வரு​கின்​றனர். ஒவ்​வொரு ஆண்​டும் கார்​களை பரி​சாக பெறும் ஊழியர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது.

இந்த தீபாவளி​யின்​போது 51 ஊழியர்​களுக்கு சொகுசு கார்​களை பரி​சாக வழங்கி உள்​ளேன். ஒரு நிறு​வனத்​தின் ஊழியர்​கள் மகிழ்ச்​சி​யாக இருக்​கும்​போது அந்த நிறு​வனம் அபரித​மாக வளர்ச்சி அடை​யும். அடுத்த ஆண்டு இதை​விட அதிக ஊழியர்​கள் கார்​களை பரி​சாக பெறு​வார்​கள். இவ்​வாறு பாட்​டியா தெரி​வித்​தார்.

பஞ்ச்​குலா​வில் நடை​பெற்ற விழா​வில் மிட்​ஸ்​கார்ட் மருந்து தயாரிப்பு நிறு​வனத்​தின் 51 ஊழியர்​கள் கார்​களை பரி​சாக பெற்​றுக் கொண்​டனர். பின்​னர் அவர்​கள் அனை​வரும் பஞ்ச்​குலா நகரில் கார்​களில் ஊர்​வல​மாக வந்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.