அரசு பள்ளி கட்டிடம் சேதம்: பிரியங்கா காந்தி கோரிக்கை

வயநாடு: கேரளா​வின் வயநாடு மாவட்​டம் திருநெல்​லி​யில் உள்ள அரசு ஆசிரம உயர்​நிலைப் பள்ளி கட்​டிடம் தகு​தியற்​றது என பொதுப் பணித் துறை அறி​வித்​தால் இங்​குள்ள மாணவர்​களை, கண்​ணூர் மாவட்​டம் ஆரலத்​தில் உள்ள மாதிரி உறை​விடப் பள்​ளிக்கு மாற்ற கேரள அரசு முடிவு செய்​துள்​ளது.

இந்​நிலை​யில் மாநில எஸ்​சி, எஸ்​டி, ஓபிசி நலத்​துறை அமைச்​சர் ஓ.ஆர்​.கேலு​வுக்கு வயநாடு காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா காந்தி எழு​தி​யுள்ள கடிதத்​தில், “அரசின் இந்த முடிவு மாணவர்​களை படிப்பை கைவிடச் செய்​யும். ஏனெனில் அவர்​களை பார்க்க கண்​ணூர் வரை பயணிக்க அவர்​களின் குடும்​பங்​களுக்கு வசதி​யில்​லை. தொலை​வில் உள்ள பள்​ளிக்கு செல்ல மாணவர்​களும் விரும்​ப​வில்​லை. எனவே இம்​முடிவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும்.

இடி​யும் அபாய​முள்ள அரசுப் பள்​ளி​யின் மாணவர்​களை வயநாடு மாவட்​டத்​தில் உள்ள பாது​காப்​பான பள்​ளிக்கு மாற்ற வேண்​டும்” என கூறி​யுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.