சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் அதிகாரி கைது

பத்​தனம்​திட்டா: கேரள மாநிலம் பத்​தனம்​திட்டா மாவட்​டத்​தில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார​பால​கர் சிலைகள் மற்​றும் அதன் பீடத்​துக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னி கிருஷ்ணன் போற்​றி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இந்த பணிக்​குப் பிறகு ஒப்​படைக்​கப்​பட்ட சிலை​யில் 4 கிலோ தங்​கம் மாய​மான​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த கேரள உயர் நீதி​மன்​றம், சிறப்பு புல​னாய்​வுக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.

இந்​நிலை​யில், திரு​வாங்​கூர் தேவசம் போர்டு (டிடிபி) முன்​னாள் நிர்​வாக அதி​காரி முராரி பாபுவை எஸ்​ஐடி அதி​காரி​கள் நேற்று முன்​தினம் இரவு கைது செய்​தனர். இதையடுத்​து, பத்​தனம்​திட்டா நீதி​மன்​றத்​தில் நேற்று அவர் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். பின்​னர் அவரை நீதி​மன்ற காவலில் வைக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.