தனியார் பல்கலைக்கழக சட்டமசோதாவை திரும்பப் பெறும் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

சென்னை: தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத்​திருத்த மசோ​தாவை திரும்​பப்​பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, கட்​சி​யின் மாநி லச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை: அண்​மை​யில் நடந்த சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தில், தனி​யார் பல்​கலைக்​கழகங்கள் சட்​டத்​திருத்த மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதனால் ஏற்​படும் எதிர்​விளைவு​கள், அரசின் சமூகநீ​திக் கொள்​கைக்கு எதி​ராக அமை​யும் என்​ப​தை​யும்,அடித்​தட்டு உழைக்​கும் மக்​களின் கல்வி பெறும் உரிமையை மறுக்​கும் என்​பதை அரசின் கவனத்​துக்கு எடுத்​துக் கூறப்​பட்​டது.

கல்​வி​யாளர்​கள், மாணவர் அமைப்​பு​கள், அரசி​யல் கட்​சிகள் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத் திருந்த மசோ​தாவை திரும்​பப் பெற வேண்​டியதன் அவசி​யத்தை வலி​யுறுத்தி வந்த நிலை​யில், அதன் நியா​யத்தை உணர்ந்​து,தமிழக அரசு மசோ​தாவை திரும்​பப் பெற்​று, மறு​பரி சீலனை செய்​வது என முடிவு எடுத்​துள்​ள​து. ​பேர​வை​யில் நிறைவேற்​றிய மசோதா மீது மக்​கள் மன்​றத்​திலிருந்து வந்த விமர்​சனக் கருத்​துக்​களுக்கு மதிப்​பளித்​து,சட்ட மசோ​தாவை திரும்​பப் பெறும் அரசின் முடிவை இந்​திய கம்​யூனிஸ்ட் வரவேற்​கிறது இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.