தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித் தலைமை நியமித்​துள்​ளது.

இந்​நிலை​யில், பாஜக சார்​பில் தமிழகத்​துக்​கான தேர்தல் அறிக்​கையை தயார் செய்ய, மத்​திய அமைச்​சர்​கள் அடங்​கிய குழுவை பாஜக தேசிய தலைமை நியமிக்க இருப்​ப​தாகத் தெரிகிறது. இந்தக் குழு​வில் தமிழக மூத்த நிர்​வாகி​களும் இடம் பெற உள்​ளனர். இந்த குழுவை விரைவில் தேசிய தலைமை அறிவிக்க இருக்​கிறது. இதில் தொகு​தி, மாநிலபிரச்​சினை​கள், மக்களை கவரும் அம்​சங்​கள் இடம்​பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.