பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிர பாணியை பயன்படுத்தும் பாஜக

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிரா சட்​டப்​பேரவை தேர்​தலில் பின்பற்றிய பாணியை பாஜக பிஹாரில் அமலாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. இது, மத்​தி​யில் அக்​கட்​சி​யின் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்டணி​யின்​ (என்​டிஏ) வெற்​றிக்கு வழி வகுக்​கும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.

மகா​ராஷ்டி​ரா​வில், இரண்​டாகப் பிரிந்த சிவசே​னா​வில் ஏக்​நாத் ஷிண்​டே​வின் பிரிவு பாஜக​வுடன் இணைந்து ஆட்சி அமைத்​தது. இதன் முதல்​வ​ராக ஏக்​நாத் ஷிண்​டேவை அமர அனு​ம​தித்​தது பாஜக. இரண்டு ஆண்​டு​கள் மற்​றும் ஐந்து மாதங்​களுக்கு முதல்​வர் பதவியை வகித்​தார் ஏக்​நாத் ஷிண்​டே.

இதையடுத்​து, 2024-ல் நடை​பெற்ற மகா​ராஷ்டிரா சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மகத்​தான வெற்றி பெற்​றது பாஜக கூட்​ட​ணி. வெற்​றிக்கு பின் தனது போக்கை மாற்​றிய பாஜக, தேவேந்​திர பட்​னா​விஸை முதல்​வ​ராக நியமித்​தது.

தேர்​தலை சந்​திக்க முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தப்​பட்ட ஷிண்​டே, துணை முதல்​வ​ராக பதவி இறக்​கம் செய்​யப்​பட்​டார். பிளவுபட்ட
மற்​றொரு கட்​சி​யும் தமது கூட்​ட​ணி​யின் தலை​வரு​மான தேசி​ய​வாத காங்​கிரஸின் அஜித் பவார் துணை முதல்​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். இதே உத்​தியை பாஜக பிஹாரிலும் பயன்​படுத்​தும் என்ற கருத்து எழுந்​துள்​ளது.

பிஹாரில் ஐக்​கிய ஜனதா தளம்​(ஜேடி​யு) தலை​வ​ரான முதல்​வர் நிதிஷ் குமார், ஒரு வலு​வான தலை​வ​ராக உள்​ளார். ஆனால், வயது மூப்​பின் காரண​மாக நிதிஷ்கு​மார் உடல்​நிலை​யில் முழு​மை​யான நலம் இல்லை எனக் கருதப்​படு​கிறது.இருப்​பினும், ஜேடி​யுவுக்கு சமமான தொகு​தி​களைப் பிரித்து அளித்​துள்​ளது பாஜக(தலா 101 தொகு​தி​கள்). எனினும், ஜேடி​யு​வின் வேட்​பாளர்​கள், பாஜகவை விட குறைந்த எண்​ணிக்​கை​யில் வெற்றி பெற்​றால், மகா​ராஷ்டிரா உத்​தியை பாஜக கையில் எடுக்​கத் தயா​ராக உள்​ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் பாஜக​வின் பிஹார் தலை​வர்​கள் வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘எங்​களுக்கு அதி​க​மான எம்​எல்​ஏக்​கள் கிடைத்​தால், ஜேடியு தனது முதல்​வர் பதவியை விட்​டுத் தரு​வதை தவிர வேறு வழி​யில்​லை’ எனத் தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.