அமெரிக்கவாழ் இந்தியர்கள் தாயகம் வர வேண்டும்: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு வழங்​கப்​படும் எச்​1பி விசா கட்​ட​ணம் அண்​மை​யில் ரூ.88 லட்​ச​மாக அதி​கரிக்​கப்​பட்​டது. விசா கட்டண உயர்வு உட்பட பல்​வேறு வகை​களில் அமெரிக்க நிறு​வனங்​களில் இந்​திய மென்​பொறி​யாளர்​கள் சேரு​வதை தடுக்க மறை​முக​மாக முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

சமீபத்​திய புள்​ளி​விவரத்​தின்​படி அமெரிக்​கா​வின் சிலி​கான் பள்​ளத்​தாக்​கில் பணி​யாற்​றும் தொழில்​நுட்ப ஊழியர்​களில் 25 சதவீதம் பேர் இந்​திய வம்​சாவளி​யினர் ஆவர். மேலும் அமெரிக்​கா​வின் முன்​னணி மென்​பொருள் நிறு​வனங்​களுக்கு இந்​தி​யர்​களே தலைமை வகிக்​கின்​றனர்.

இதுகுறித்து அமெரிக்​கா​வின் மன்​ஹாட்​டன் இன்​ஸ்​டிடியூட் அமைப்​பின் ஆராய்ச்​சி​யாளர் டேனியல் டி மார்​டினோ வெளியிட்ட ஆய்​வறிக்​கையில், ‘‘அமெரிக்​கா​வில் வாழும் இந்​திய வம்​சாவளி​யினர் குறித்து சில முட்​டாள்​கள் எதிர்​மறை​யாக கருத்​துகளை கூறி வரு​கின்​றனர். என்​னுடைய ஆய்​வின்​படி இந்​திய வம்​சாவளி​யினரால் அமெரிக்கா​வுக்கு அதிக நன்மை கிடைத்​திருக்​கிறது’’ என்றார்.

இந்த பதிவை சோஹோ நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதள பக்​கத்​தில் பகிர்ந்​துள்​ளார். அதோடு வேம்பு வெளி​யிட்ட பதி​வில், ‘‘இந்​திய வம்​சாவளி​யினர் வசிக்​கும் நாடு​களின் வளர்ச்​சிக்​காக, அவர்​கள் அதிக நிதி பங்​களிப்பை வழங்கி உள்​ளனர். இது டேனியல் டி மார்​டினோ​வின் ஆய்​வறிக்​கை​யில் சுட்​டிக் காட்​டப்​பட்டுள்​ளது.

இந்த நேரத்​தில் இந்​திய வம்​சாவளி​யினருக்கு ஓர் அழைப்பை விடுக்​கிறேன். ஒரு நாடு உங்​களை வரவேற்​க​வில்லை என்​றால் அந்த நாட்​டில் நீங்​கள் ஏன் வாழ வேண்​டும். பாரத மாதா உங்​களை அழைக்​கிறாள். உங்​களை வரவேற்க ஆவலோடு காத்​திருக்​கிறாள். வெளி​நாடு​களில் வசிக்​கும் இந்​திய வம்​சாவளி​யினர் தாயகத்​துக்கு திரும்ப வேண்​டும். நாம் ஒன்​றிணைந்து மிக வலு​வான, வளமான இந்​தி​யாவை கட்டி எழுப்​புவோம்’’ என்றார்.

இந்த பதி​வின் மூலம் அமெரிக்​கா​வில் வாழும் இந்​தி​யர்​கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு பகிரங்​க​மாக அழைப்பு விடுத்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.