1 லட்சம் வண்டல் சேகரிப்பு தொட்டிகளில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி தொடக்கம்

சென்னை: மாநக​ராட்சி சார்​பில் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வண்​டல் சேகரிப்பு தொட்​டிகளில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாநக​ராட்சி சார்​பில் மழைநீர் வடி​கால்​களில் மழைநீர் தடையின்றி செல்​வதை உறுதி செய்​வதற்​கும், சாலைகளில் மிதக்​கும் கழி​வு​கள் வடி​கால்​களில் நுழைவதை தடுப்​ப​தற்​கும், வண்டல் மண் சேகரிக்​க​வும் மழைநீர் வடி​கால்​களில் 5 மீட்​டர் இடைவெளி​யில் 1,03,166 வண்​டல் வடிகட்​டித் தொட்​டிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மழை தொடங்​கு​வதற்கு முன்​பாகவே இந்த வண்​டல் சேகரிப்பு தொட்டிகளில் வண்​டல்​கள் மற்​றும் குப்​பைகளை அகற்றி முதல்​கட்​ட​மாக சுத்​தம் செய்​யும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

200 வார்டு​களி​லும் வண்​டல் சேகரிப்பு தொட்​டிகளில் தூர்​வாரி வண்​டல் மண் அகற்​றும் பணி மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளது.. பரு​வ​மழைக் காலம் முழு​வதும் தொடர்ந்து இப்​பணியை மேற்​கொள்ள அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.