புதுடெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக பொற்கொடி சார்பில் வழக்கறிஞர் ராகுல் ஷியாம் பண்டாரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். கொலை வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.