மதுரை: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபப்ட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 6-இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை. மதுரையின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் […]