சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்… 2ம் சுற்றில் ஸ்ரீவள்ளி பாமிடிபதி, சகஜா யமலபள்ளி!

WTA Chennai Open 2025: ‘WTA 250’ அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியின் தொடக்க நாள் ஆட்டம் இரு நாள்கள் (அக். 27, அக். 28) மழையால் ரத்து செய்யப்பட்டன.

Add Zee News as a Preferred Source

WTA Chennai Open 2025: ஸ்ரீவள்ளி வெற்றி

இதையடுத்து, முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவு என இருப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், நேற்று நடந்த ஒற்றைப் பிரிவு முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் (16), தெலுங்கானாவை சேர்ந்த சக இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிடிபதி (23) உடன் மோதினார். இந்த போட்டியில் 6-1, 6-4 என்ற கணக்கில் வென்று ஸ்ரீவள்ளி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார். ஸ்ரீவள்ளி, ஆஸ்திரேலிய வீராங்கினை கிம்பர்லி பிர்ரெல் உடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இன்று மோதுவார்.

WTA Chennai Open 2025: வைஷ்ணவி அத்கர் அதிர்ச்சி தோல்வி

மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் வைல்ட் கார்ட் சிறப்பு நுழைவு மூலம் ஆடிய இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் (20), குரோஷியாவை சேர்ந்த டோனா வெகிக் (29) உடன் மோதினார். துடிப்புடன் ஆடிய வெகிக், அதிரடியாக புள்ளிகளை எடுத்தார். அதனால், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற வெகிக் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

WTA Chennai Open 2025: சகஜா யமலபள்ளி வெற்றி 

மற்றொரு முதல் சுற்று போட்டியில், இந்திய வீராங்கனை சகஜா யமலபள்ளி (25), இந்தோனேஷிய வீராங்கனை பிரிஸ்கா நுக்ரோஹோ உடன் மோதினார். சகஜா யமலபள்ளி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.  சகஜா யமலபள்ளி, குரேஷியாவின் டோனா வெகிக் உடன் இன்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதுகிறார். இரண்டாம் சுற்று ஒற்றையர் போட்டிகள் மற்றும் மீதமுள்ள முதல் சுற்று இரட்டையர் போட்டிகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The sun blazed rackets clashed, and the high octane tennis action peake

at the WTA 250 Chennai Open. @CMOTamilnadu@Udhaystalin@TNDIPRNEWS#SportsTN #TalentSDAT #NammaChampions #KalamNamadhe pic.twitter.com/USEDNMf09a

— Sports Tamil Nadu (@SportsTN_) October 30, 2025

இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை வீராங்கனையான பிரான்செஸ்கா ஜோன்ஸ், ஜப்பானிய வீராங்கனை மெய் யமகுச்சிக்கு எதிரான தனது முதல் சுற்றுப் போட்டியின் மூன்றாவது செட்டின் ஆரம்பத்தில் கடும் வெப்பம் காரணமாக ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

WTA Chennai Open 2025: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடரில், இன்று ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிடிபதி மற்றும்  சகஜா யமலபள்ளி ஆகியோர் விளையாடுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்கள் இன்றைய போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவார்கள்.

மேலும் படிக்க | மருத்துவமனையில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்… முதல்முறையாக போட்ட உருக்கமான பதிவு…!

மேலும் படிக்க | ஐபிஎல் மினி ஏலம்: இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு கோடிகள் கொட்டும்… உற்றுநோக்கும் CSK

மேலும் படிக்க | மகளிர் உலகக் கோப்பை 2025: அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள்.. லிஸ்ட்டில் இரண்டு இந்தியர்கள்!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.