அனைத்துக் கட்சி கூட்டம் திசை திருப்பும் நாடகம்:  நயினார் நாகேந்திரன் விமர்சனம் 

சென்னை: அனைத்​துக் கட்சி கூட்​டம் மக்​களை திசை திருப்​பும் நாடகம் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: மக்​கள் குறை​களைத் தீர்க்க ஒரு​போதும் அனைத்​துக் கட்சிக் ​கூட்​டத்தைக் கூட்​டாத முதல்​வர் ஸ்​டா​லின், தற்​போது மட்​டும் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தம் பற்​றிய கூட்​டத்தை நடத்​து​வ​தில் இருந்தே தெரி​கிறது இது மக்​களை மடை​மாற்ற நடத்​தப்​படும் மற்​றுமொரு திசை​திருப்பு நாடகம் என்​று.

பல்​லாண்​டு​காலமாகத் தொடர்ந்து நடை​பெறும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​தை, ஏதோ அந்​நிய​மானது போல, பிர​தான​மாகக் காட்​சிப்படுத்​தி, மழைவெள்ள பாதிப்​பு, ஊழல், விவ​சா​யிகள் படும் அல்​லல் ஆகிய​வற்றை மறைத்​து, குளிர்​காய முயற்​சிப்​பது இனி​யும் செல்​லாது. திமுக​வின் திசை​திருப்பும் நாடகத்தை நன்கு அறிந்​து, பல கட்​சிகள் கூட்​டத்தை புறக்​கணித்​துள்ள நிலை​யில், தோல்வி பயத்​தில் உள்ள கட்​சிகள் மட்​டுமே இக்​கூட்​டத்​தில் கலந்து கொண்​டுள்​ளன.

திமுக அரசின் தொடர் திசை​திருப்பு நாடகத்​தை​யும் வெற்று விளம்​பரத்​தை​யும் பார்த்​துப் பார்த்து சலித்​துப்​போன தமிழக மக்​கள், இந்த வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்த எதிர்ப்பு நாடகத்​தை​யும் புறக்​கணிப்​பர். ஜனநாயகத்​தின் மீதுசிறிதும் அக்​கறை இருந்​தால், முறை​யாக வாக்​காளர் பட்டியல் திருத்​தத்தை எதிர்ப்​ப​தை​விடுத்​து, எஞ்​சி​யிருக்​கும் நாட்​களில் தங்​களுக்கு வாக்​களித்த மக்​களின் குறை​களைத் தீருங்​கள். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.