ஆபரேஷன் சிந்தூர்: ராணுவ தளபதி திவிவேதி விளக்கம்

ரேவா: மத்​தி​யப் பிரதேசம் ரேவா​வில் தான் படித்த சைனிக் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சி​யில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்​திர திவிவேதி கலந்து கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்போது தீவிர​வா​தி​கள் இருந்த இடங்​களை மட்​டுமே நாங்​கள் தாக்​கினோம். பொது மக்​கள் மற்​றும் ராணுவ மையங்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​த​வில்​லை.

அதே​போல் தொழுகை நடை​பெறும் நேரத்​தி​லும் ராணுவம் தாக்​குதல் நடத்​த​வில்​லை. எங்​கள் இலக்​கு​களை ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் அடைந்​தோம். இவ்​வாறு தி​விவே​தி கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.