மோடி ஆட்சிக்கு வந்த  10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் 

சென்னை: மோடி ஆட்சி பொறுப்​புக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளதாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி பெரு​மிதத்​துடன் கூறி​னார்.

இந்​தி​யா​வில் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​கள் உரு​வான தின விழா ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆளுநர் பேசி​ய​தாவது: தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்​கள் உரு​வான நிகழ்வை கொண்​டாடு​கிறோம். நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு ஒரே பாரத​மாக இல்​லை. 560 சமஸ்​தானங்​களாக பிரிந்து கிடந்​தன.

அவற்றை எல்​லாம் தனது வலிமை​யான, உறு​தி​யான நடவடிக்​கைகளால் 2 ஆண்​டு​களில் ஒன்​றிணைத்​தவர் சர்​தார் வல்​ல​பாய் படேல். அவரது பிறந்த நாளான அக்​.31-ம் தேதியை தேசிய ஒற்​றுமை தின​மாக கொண்​டாடு​கிறோம்.

இந்​தியா என்​பது பல்​வேறு மொழிகள், கலாச்​சா​ரங்​கள், பழக்க வழக்​கங்​கள், காலநிலை கொண்ட ஒரு அழகான பெரியதேசம். ‘வேற்​றுமை​யில் ஒற்​றுமை’ என்​பதே நமது பலம். இதை நாம் ஆழமாக புரிந்​து​கொள்ள வேண்​டி​யுள்​ளது. இந்​தி​யா​வின் தென்​கோடி​யில் பிறந்த ஆதிசங்கரர் வடகோடி​யில் உள்ள காஷ்மீரில் சிவன் கோயிலை கட்​டி​னார். சங்​கரதேவ் அஸ்​ஸாமிலிருந்து ராமேசுவரம் வந்​துள்​ளார். சீக்​கியகுரு குரு​நானக் இந்​தியா முழு​வதும் பயணம் செய்​துள்​ளார். ஆனால், இப்​போது தெற்கு வடக்கு என்று பேசுகிறார்​கள். நமது ஒற்​றுமை வெவ்​வேறு பெயர்​களைக் கொண்ட பண்​டிகைகளால் நாடு முழு​வதும் கொண்​டாடப்​படு​கிறது.

நாடு சுதந்​திரம் அடைந்த பின்​னர் மொழிரீ​தியி​லான வேறு​பாடும், வேற்​றுமை உணர்​வும் எழத் தொடங்​கின. காஷ்மீரில் தீவிர​வா​தி​கள், வடகிழக்கு பிராந்​தி​யத்​தில் பிரி​வினை​வா​திகள், நக்​சலைட்​கள் என ஆங்காங்கே வெவ்​வேறு வடி​வில் வன்முறைகள் ஏற்​பட்​டன. ஆண்​டு​தோறும் சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வன்​முறை​களால் உயி​ரிழந்​தனர். ஆனால் பிரதமர் மோடி ஆட்சி பொறுப்​பேற்ற பிறகு கடந்த 10 ஆண்​டு​களில் வன்​முறை​கள் அடியோடு மறைந்​தன.

காஷ்மீரிலும், வடகிழக்கு பிராந்​தி​யத்​தி​லும் அமைதி ஏற்​பட்​டுள்​ளது. நாட்​டுக்கு கிடைத்த சரி​யான தலை​மை​தான் இந்த மாற்​றங்​களுக்கு எல்​லாம் காரணம். 10 ஆண்​டுக்கு முன்பு பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய நிலை​யில் இருந்த இந்​தியா இன்​றைய உலக அளவில் 4-வது பெரிய பொருளா​தா​ர​மாக வளர்ந்​துள்​ளது. விரை​வில்3-வது இடத்தை எட்​டி​விடு​வோம். 2047-ம் ஆண்டு முற்றி​லும் வளர்ந்த இந்​தி​யா​வாக மாறு​வோம் என்ற நம்​பிக்கை உள்​ளது. இவ்​வாறு ஆளுநர் பேசி​னார். முன்​ன​தாக, கலை, கலாச்​சா​ரம், கல்​வி, மருத்​து​வம், அரசுப் பணி, பாது​காப்​புப் பணி உள்பட பல்​வேறு துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நினை​வுப் பரிசுகள் வழங்கி ஆளுநர் கவரவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.