அணுசக்தி ஆராய்ச்சி ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்ட போலி விஞ்ஞானி யார்? – திடுக்கிடும் பின்னணி தகவல்கள்

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் குற்​றப் பிரிவு போலீ​ஸார் கடந்த மாதம் 60 வயதுடைய ஒரு​வரை கைது செய்​தனர். அவர் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்​தின் (பார்க்) விஞ்​ஞானி என்று கூறிக் கொண்டு நாடு முழு​வதும் பயணம் செய்​துள்​ளார். இதுகுறித்து மும்பை போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி​ய​தில் பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்​தின் விஞ்​ஞானி என்று கூறிக் கொண்டு ஜார்​க்கண்ட் மாநிலம் ஜம்​ஷெட்பூரைச் சேர்ந்த அக்​தர் உசைனி என்​பவர் செயல்​பட்​டுள்​ளார். கடந்த 1995-ம் ஆண்டு முதல் அணு ஆராய்ச்சி தொடர்​பான பல ரகசிய ஆவணங்​களை வெளி​நாடு​களுக்கு விற்​றுள்​ளார்​. அதன்​மூலம் கோடிக்​கணக்​கில் பணம் பெற்று வந்துள்ளார். மேலும், விஞ்​ஞானி என்று கூறிக் கொண்டு நாடு முழு​வதும் சென்று வந்​துள்​ளார்.

அவரை கடந்த மாதம் மும்பை போலீ​ஸார் கைது செய்​தனர். அணு ஆயுதம் தொடர்​பாக அவரிடம் இருந்து 10 வரைபடங்​கள், போலி பாஸ்​போர்ட்​டு​கள், ஆதார், பான் கார்​டு​கள், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்​தின் போலி​யான அடை​யாள அட்டை போன்​றவை பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும், அலி ரஸா உசைன், அலெக்​சாண்​டர் பால்​மர் போன்ற பெயர்​களி​லும் அவர் மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளார். அக்​தர் உசைனிக்கு உதவி​யாக இருந்த அவரது சகோ​தரர் ஆதில் என்​பவரை டெல்​லி​யில் கைது செய்​துள்​ளனர்.

அத்​துடன், அக்​தர் மற்​றும் ஆதில் ஆகியோர் பாகிஸ்​தானுக்​கும் சென்று வந்​துள்​ளனர். இதன்​மூலம் அந்​நாட்​டின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புடன் அவர்​களுக்கு தொடர்பு இருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதுகுறித்து அக்​தர், ஆதில் ஆகியோரிடம் போலீஸார்​ தொடர்ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.