பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு: 121 தொகுதிகளில் 122 பெண்கள் உட்பட 1,314 பேர் போட்டி

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​திருந்​தது.

இதன்​படி, மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகு​தி​களில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் உள்​ளனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மெகா கூட்​டணி 61, தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. எனவே, இந்த முதல்​கட்ட தேர்​தல் இரண்டு கூட்​ட​ணி​களுக்​கும் மிக முக்​கிய​மான​தாக உள்​ளது.

முதல் முறை​யாக போட்​டி​யிடும் பிரா​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கூட்​ட​ணிக்​கும் இன்​றைய வாக்​குப்​ப​திவு மிக​வும் முக்​கிய​மான​தாக அமைந்​துள்​ளது. கடந்த முறை, இரண்டு கூட்​ட​ணி​களுக்​கும் இடையி​லான வாக்கு வித்​தி​யாசம் சில ஆயிரம் மட்​டுமே. இதனால் மெகா கூட்​டணி ஆட்சி அமைய வெறும் 12 தொகு​தி​கள் குறைந்​தன. சிராக் பாஸ்​வானின் எல்​ஜேபி தனித்து போட்​டி​யிட்​டிருந்​தது. அக்​கட்​சி​யின் ஒரு எம்​எல்​ஏ​வும் பிறகு முதல்​வர் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளத்​தில் (ஜேடி​யு) இணைந்​தார். அதே​நேரம், இந்த முறை எல்​ஜேபி என்​டிஏவுடன் இணைந்​த​தால் இக்​கூட்​ட​ணிக்கு பிரச்​சினை இருக்​காது என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த 121 தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யின் தலை​மைக் கட்​சி​யான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மட்​டும் 42 தொகு​தி​களில் வென்​றிருந்​தது. இக்​கூட்​ட​ணி​யின் இதர உறுப்​பினர்​களான காங்​கிரஸ் 8 மற்​றும் இடது​சா​ரி​கள் 11 தொகு​தி​களைப் பெற்​றன. அதே​போல், பாஜக 32 மற்​றும் ஜேடியு 23 தொகு​தி​களில் வெற்றி பெற்​றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.