பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

மும்பை: பேருந்து மோதி உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​துக்கு ரூ.30 லட்​சம் இழப்​பீடு வழங்க மோட்​டார் விபத்து தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

மகா​ராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்​தத்​தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்​டிருந்​தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேக​மாக புறப்​பட்​டு பின்​னர் திடீரென பின்​னோக்கி வந்​துள்​ளது. அப்​போது தினேஷ் மீது மோதி​ய​தில் உயி​ரிழந்​தார்.

தினேஷின் மனை​வி, இது தொடர்​பாக மோட்​டார் விபத்து இழப்​பீடு தீர்ப்​பா​யத்​தில் (எம்​ஏசிடி) முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்த தீர்ப்​பா​யம், விபத்​துக்கு பேருந்து ஓட்​டுநரின் அலட்​சி​யமே காரணம் என தீர்ப்பு வழங்கி உள்​ளது. அந்​தப் பேருந்​துக்கு காப்​பீடு செய்​துள்ள நிறு​வன​மும் பொறுப்​பேற்க வேண்​டும் என உத்​தர​விட்ட தீர்ப்​பா​யம், உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​தினருக்கு இழப்​பீ​டாக ரூ.30.11 லட்​சம் வழங்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டுள்​ளது. மேலும் அந்​தத் தொகைக்கு 9% வட்டி வழங்க வேண்​டும் என்​றும் தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.