எஸ்ஐஆர் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம்

சென்னை: எஸ்​ஐஆர் திருத்​தப் பணி​கள் குறித்த பொது​மக்​களின் சந்​தேகங்​களை தீர்ப்​ப​தற்கு தேர்​தல் ஆணை​யத்தை வலி​யுறுத்த வேண்​டுமென திமுக சட்​டத்​துறைக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார். தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை (எஸ்​ஐஆர்) தேர்​தல் ஆணை​யம் அமல்​படுத்​தி​யுள்​ளது.

இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்​டணி கட்​சிகளு​டன் இணைந்து போராட்​டம், உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு என பல்​வேறு செயல்​பாடு​களை முன்​னெடுத்து வரு​கிறது. அதனுடன் எஸ்​ஐஆர் திருத்​தப் பணி​களுக்கு வழி​காட்​டு​தல்​கள் வழங்க திமுக தலைமை அலு​வல​கத்​தில் சிறப்பு உதவி மையத்தை திமுக அமைத்​துள்​ளது.

ஒரே நாளில் 627 அழைப்புகள்: அந்த உதவி மையத்தின் தொடர்பு எண்​ணுக்கு (08065420020) நேற்று முன்​தினம் ஒரு​நாள் மட்​டும் 627 அழைப்​பு​கள் பெறப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. அதில், ‘2002-ம் ஆண்​டில் வாக்​களித்த இடத்​தை​விட்டு வேறு இடத்​துக்கு மாற்றி குடியேறி​னால், வாக்​குரிமை தற்​போது எந்த இடத்​தில் அமை​யும், படிவத்​தில் உறவினர் குறித்து தகவல் கட்​டா​யம் நிரப்ப வேண்​டு​மா? 2024-ம் ஆண்​டின் வாக்​காளர் பட்​டியலில் பெயர் விடு​பட்​டுள்​ளது.

தற்​போது பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்​டும்? வெளி​நாட்​டில் வேலை​யில் இருந்​தால் அவருடைய படிவத்தை எவ்​வாறு பூர்த்தி செய்​வது? பிஎல்ஓ அலு​வலர்​கள் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுவ​தில்லை என்பன போன்ற பல்​வேறு கேள்வி​கள் முன்வைக்கப்பட்டுள்​ளன. இந்த சந்​தேகங்​களை தீர்ப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை எடுக்க தேர்​தல் ஆணை​யத்தை திமுக சட்​டத்​துறை சார்​பில் வலி​யுறுத்த வேண்​டுமென முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.