கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியதால் பரபரப்பு

பெங்களூரு: கர்​நாட​கா​வில் கரும்​புக்கு வழங்​கப்​படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்​தக்​கோரி கடந்த 8 நாட்​களாக விவ​சா​யிகள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற‌னர்.

பெல​காவி மாவட்​டத்​தில் நேற்று ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேசிய நெடுஞ்​சாலையை மறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்​லு​மாறு கூறிய​தால் இரு தரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதனிடையே விவ​சா​யிகளில் சிலர் அங்​கிருந்த போலீ​ஸாரின் மீதும், வாக​னங்​களின் மீதும் கல்​வீசி தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்தி கூட்​டத்தை கலைத்​தனர். பின்​னர் நிலைமை கட்​டுக்​குள் வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

விவ​சா​யிகள் நடத்​திய கல்​வீச்சு தாக்​குதலில் 50-க்​கும் மேற்​பட்ட பொது​மக்​களும், 10-க்​ கும் மேற்​பட்ட போலீ​ஸாரும் காயமடைந்​தர். 3 அரசு பேருந்​துகள், 4 லாரி​களின் கண்​ணாடிகள் நொறுங்​கின.

இதனிடையே கர்​நாடக வேளாண் அமைச்​சர் சிவானந்த் பாட்​டீல் விவ​சா​யிகளிடம் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக அங்கு வந்​தார். அப்​போது விவ​சா​யிகள் சிலர் தங்​களின் காலணி​களை அவரது காரின் மீது வீசி​ய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.