பொய்யான தகவல்களைக் கூறி முதல்வர் ஸ்டாலினை விமர்சிப்பதா? – அன்புமணி, ஆதவ் அர்ஜுனாவுக்கு காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

சென்னை: திமுக வர்த்தக அணி செய​லா​ளர் காசி​முத்து மாணிக்​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேம்​பால வழக்​கில் பெங்​களூரு​வில் இருந்து நேராக நீதிபதி அசோக்​கு​மார் வீட்​டுக்கே காலை 11 மணிக்கு சென்று சரண்​டர் ஆனார் தற்போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். பின்​னர் சிறைக்​குச் சென்​று, விடு​தலை​யும் ஆனார்.

அந்த வழக்கு என்ன ஆனது? 2011 முதல் 2021 வரை அதி​முக​வினர் என்ன செய்​தார்​கள்? சிறை என்​றவுடன் ஓடிப்​போனவர் இல்லை ஸ்டா​லின். சிறை என்​றதும் ஓடோடி வந்​தவர் அவர். கரூரில் உங்​கள் உறவு 41 பேர் இறந்​தார்​கள் என்​கிறீர்​கள், அதை 91 ஆகாமல் பார்த்​துக் கொண்​ட​வர் முதல்​வர் ஸ்டா​லின்.

இரண்டு கோடி உறுப்​பினர் கொண்ட இயக்​கம் எனக்​கூறும் தவெக​வில் ஒரு​வரைக்​கூட மருத்​து​வ​மனை​யில் காண​வில்​லை. ஓடிப்​போன நீங்​கள், எங்​களை ஓடிய​வர்​கள் என்று கூறு​வது வடிகட்​டிய பொய். காசு இருக்​கிறது என்​ப​தற்​காக எதை வேண்​டு​மா​னாலும் பேசும் போக்கை ஆதவ் அர்​ஜுனா மாற்​றிக்​கொள்ள வேண்​டும்.

பட்​டியல், வன்​னியர் சமூகங்​களைச் சேர​வி​டா​மல் திமுக சதி செய்​வ​தாக அன்​புமணி கூறுகிறார். பட்​டியல் இனத்தை மட்​டுமல்ல, பாமக நிறு​வனர் ராம​தாசை​யும் சேர்த்து அன்​புமணி​யிடம் இருந்து காப்​பாற்றி வரு​வது திமுக​தான். அன்​புமணிக்கு கேபினட் அந்​தஸ்​தில் சுகா​தார அமைச்​சர் பதவி வாங்​கித் தந்​தது திமுக என்​பதை மறக்​கக்​ கூ​டாது. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.