பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியா தப்பியோட்டம்

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி​யின் எம்​எல்ஏ ஹர்​மீத் சிங் பதன்​மஜ்ரா பாலியல் குற்​றச்​சாட்​டில் சிக்​கியதையடுத்து, ஆஸ்​திரேலி​யா​வுக்கு தப்​பியோடி தலைமறை​வாகி உள்​ளார்.

பஞ்​சாப் மாநிலத்​தின் சனூர் தொகு​தி​யில் முதல் முறை​யாக ஆம் ஆத்மி கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆனவர் ஹர்​மீத் சிங் பதன்​மஜ்​ரா. இவர் மீது ஜிர்​காபூரைச் சேர்ந்த பெண் ஒரு​வர் பாலியல் குற்​றச்​சாட்டை அளித்​தார். அதில், ஹர்​மீத் முன்பே திரு​மண​மானதை மறைத்து தன்னை திரு​மணம் செய்து ஏமாற்​றி​விட்​ட​தாக​வும், பாலியல் ரீதி​யாக​வும், ஆபாச​மான பதிவு​களை அனுப்​பி​யும் தொல்லை கொடுத்​ததுடன் தொடர்ந்து கொலை மிரட்​டல் விடுத்​ததாக​வும் அந்​தப் பெண் புகார் கூறி​யிருந்​தார்.

இதையடுத்து ஆம் ஆத்மி எம்​எல்ஏ மீது சிவில் லைன் போலீ​ஸார் பாலியல் வன்​கொடுமை, மோசடி, கொலை மிரட்​டல் விடுத்​தல் ஆகிய பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​தனர். இதையடுத்​து, ஹரி​யானா கர்​னல் மாவட்​டத்​தில் உள்ள தப்ரி கிராமத்​தில் உள்ள உறவினர் வீட்​டில் பதுங்​கி​யிருந்த ஆம் ஆத்மி எம்​எல்​ஏவை பிடிக்க தனி போலீஸ் படை சென்​றது. அவரது ஆதர​வாளர்​கள் போலீ​ஸாரை நோக்கி கற்​களை வீசி​யும், துப்​பாக்​கி​யால் சுட்​டும் தாக்​குதல் நடத்​தி​னர். அப்​போது ஹர்​மீத்போலீ​ஸாரின் பிடியி​ல்இருந்து தப்​பி ஆஸ்​திரேலி​யா​வுக்கு சென்​று​விட்​டார்.

இந்த வழக்​கில் ஆஜரா​காததையடுத்து பாட்​டி​யாலா நீதி​மன்​றம் ஹர்​மீதை தேடப்​படும் குற்​ற​வாளி​யாக அறி​வித்து நடவடிக்கை எடுத்​தது. அவருக்கு எதி​ராக லுக்​-அவுட் நோட்​டீஸும் பிறப்​பிக்​கப்​பட்​டது. இந்த நிலை​யில் ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த ஒரு பஞ்​சாபி வெப் சேனலில் ஆம்ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் சிங் பேட்​டியளித்​துள்​ளார். அதில் அவர் கூறியதாவது: என் மீது கூறப்​படும் குற்​றச்​சாட்​டு​கள் அனைத்​தும் அரசி​யல் சதி​யின் காரண​மாக ஜோடிக்​கப்​பட்​ட​வை. பஞ்​சாப் மக்​களுக்​காக பேசுவதை தடுக்​கவே இந்த வழக்கு போடப்​பட்​டுள்​ளது. பஞ்​சாப் அமைச்​சர்​கள் மற்​றும் எம்​எல்​ஏக்​களிடம் முக்​கிய விவ​காரங்​களில் ஆலோசனை நடத்​தப்​படு​வ​தில்​லை.

பேச்சு சுதந்​திரம் தடுக்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் ஆட்​சியை இழந்​த​பிறகு அந்த தலை​வர்​கள் இப்​போது பஞ்​சாபை கைப்​பற்றி அதே வழி​யில் நாச​மாக்கி வரு​கின்​றனர். எனக்கு நீதி​மன்​றத்​தின் மேல் முழு நம்​பிக்கை உள்​ளது. என்னை போலி என்​க​வுன்ட்​டர் செய்ய போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர். எனவே, ஜாமீன் கிடைத்​தால்​மட்​டுமே இந்​தியா திரும்​புவேன்​. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.