விழிப்புணர்வு முக்கியம்! – இன்றைய பெற்றோர் தெரிந்துக் கொள்ள வேண்டிய வளர்ப்பு முறை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர். அதில் ஒன்றாக “விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறை” (Mindful Parenting) வேகமாக பிரபலமாகி வருகிறது.

இது குழந்தையை புரிந்துகொண்டு, அமைதியாகவும் அன்புடனும் வளர்க்க உதவும் தற்கால வழிமுறை.

பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவது ஏன்?

இன்றைய குழந்தை வளர்ப்பு ஒரு போட்டியாக மாறிவிட்டது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை புத்திசாலி, திறமையானவர், நல்லொழுக்கமுடையவர் என இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். “சிறந்த பெற்றோர்” ஆக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பலருக்கு மனஅழுத்தம், குற்ற உணர்வு, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பிரமாண்ட பிறந்தநாள் விழாக்கள், பெரிய பள்ளியில் படிக்க வைப்பது, போட்டோஷூட்கள் நடத்துவது உள்ளிட்டவற்றை பார்க்கும்போது, நாமும் அதேபோல் செய்ய வேண்டும் என்ற மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனால் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வும் ஏற்பட்டு குழந்தையுடன் உள்ள பிணைப்பும் குறைகிறது.

விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறை என்றால் என்ன?

குழந்தையுடன் இருக்கும் போது முழு கவனத்துடனும், உணர்வோடும், பொறுமையோடும் நடந்துகொள்வதே Mindful Parenting.

குழந்தையின் நடத்தையை கோபத்துடன் எதிர்கொள்ளாமல், அமைதியாக பதிலளிப்பதே இதன் அடிப்படை.

எளிமையாகச் சொன்னால்,

குழந்தையுடன் பேசும் போது அல்லது விளையாடும் போது, நம் மனமும் கவனமும் முழுவதுமாக அவர்கள்மீது இருக்க வேண்டும்.

இந்த வழிமுறை பெற்றோர்களுக்கு பொறுமையையும் புரிதலையும், குழந்தைகளுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் கற்பிக்கிறது.

விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறையின் பலன்கள்

  • குடும்பத்தில் அமைதி, நம்பிக்கை, புரிதல் அதிகரிக்கும்.

  • குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்வார்கள்.

  • வீட்டில் மரியாதையும் பாசமும் நிறைந்த சூழல் உருவாகும்.

  • பெற்றோர்கள் சிந்தித்து பேசும் பழக்கத்திற்கு மாறுவார்கள்.

  • குழந்தைகளும் தங்கள் உணர்வுகளை அச்சமின்றி வெளிப்படுத்த கற்றுக்கொள்வார்கள்.

ஏன் இது முக்கியம்?

முந்தைய தலைமுறைகளில், குழந்தை வளர்ப்பில் கட்டுப்பாட்டும் கட்டளைகளும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகள் சுயமாக சிந்தித்தல், மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள்.

அவர்களுக்கு கண்டிப்பு மட்டுமல்ல, புரிதல், உரையாடல், மரியாதை தேவை.

அதனால்தான் இன்றைய பெற்றோர்கள், அன்பும் அமைதியும் அடிப்படையாகக் கொண்ட வளர்ப்பு முறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு இடைவெளி விடுவது பெரிய மாற்றம் தரும்

குழந்தை தவறு செய்தாலும், உடனே கோபப்படாமல் ஒரு நிமிடம் மூச்சு விட்டு ரிலாக்ஸ் ஆகுங்கள்.

அந்த சிறிய இடைவெளி நம்மை தெளிவாக யோசிக்கச் செய்து, சரியான பதிலைத் தர வழி காட்டும்.

இது குழந்தையையும் அதேபோல் அமைதியாகவும் பொறுமையுடனும் நடக்கச் செய்கிறது.

நிஜ வாழ்க்கையில் எப்படி பின்பற்றலாம்?

1. சிறந்த முன்மாதிரியாக இருங்கள்:

பெற்றோர் தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை குழந்தைகள் கவனிக்கிறார்கள். உங்கள் செயல் அவர்களுக்கு பாடமாகிறது.

2. முழு கவனம் செலுத்துங்கள்:

குழந்தை பேசும் போது, அலைபேசி கீழே வைத்துவிட்டு. அந்த நேரத்தில் முழு கவனம் அவர்கள்மீது இருக்கட்டும்.

3. பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்:

குழந்தைகள் சிறிய முயற்சியைக் கூட பாராட்டுங்கள். அது அவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

4. ஒப்பிடுவதை தவிர்க்குங்கள்:

“அவன் பார்த்தியா?” என்ற வாக்கியம் குழந்தையின் மனத்தில் காயத்தை ஏற்படும். ஒப்பீடு அல்ல, ஊக்கத்தை கொடுங்கள்.

5. கோபத்தை கட்டுப்படுத்துங்கள்:

குழந்தைகளிடத்தில் கத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நின்று, ஆழமாய் மூச்சு விடுங்கள்.

6. பொறுப்புகளை கொடுங்கள்:

வயதுக்கு ஏற்ற சிறிய வேலைகளை ஒப்படையுங்கள் — அது பொறுப்புணர்ச்சியை வளர்க்கும்.

7. உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்:

குழந்தை அழுதால் அல்லது கோபப்பட்டால், அதைத் தடுத்து நிறுத்தாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. சுவாசப் பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள்:

மனஅழுத்தத்தைக் குறைக்க இது உதவும். அமைதி பரவும்.

9. அன்பும் இரக்கமும் வெளிப்படுத்துங்கள்:

“நான் உன்னை நேசிக்கிறேன்” என்ற வார்த்தை குழந்தைக்கு பாதுகாப்பான உலகத்தை அளிக்கிறது.

10. அவர்களுடனான தருணங்களை ரசியுங்கள்:

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.