சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதிமுக பூத் ஏஜெண்டுகளுகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குகள் போன்றவைகளை சரிபார்த்து உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் […]