சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால், ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, ரயில் சேவைகளின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்யும் வகையில், திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணிக்காக சென்னை சென்ட்ரல் […]