
சென்னை: எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமையான தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 1633-ம்
ஆண்டு முதலான புத்தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமையான ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.