
பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பாஜக அரசு மூடிவிட்டதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, ‘இந்தியாவின் இந்திராவை கொண்டாடு வோம்’ எனும் விழா, மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் தலைமையில், அம்பத்தூரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. அதில், மகளிர் காங்கிரஸாருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.