சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா: ரிஷப் பண்ட் கூறிய காரணம் இது தான்…

கவுகாத்தி,

கவுகாத்தியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.ஜடேஜா மட்டும் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார் . அவர் 54 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் இந்திய அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் ஹார்மர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் . இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா , இந்த வெற்றியால் தொடரை 2-0 என வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது .

இந்த நிலையில் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது,

இது ஏமாற்றமளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் . இதில் எதிரணிக்கு நாம் பெருமை சேர்க்க வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.அவர்கள் தொடரில் ஆதிக்கம் செலுத்தினர். எங்கள் மனநிலையில் நாங்கள் தெளிவாக இல்லை. எதிர்காலத்தில், நாங்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக மாறுவோம்.

கிரிக்கெட் போட்டியை ஒரு அணியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் அதைச் செய்யவில்லை, அது முழு தொடரை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது . எங்கள் சொந்த திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதை தான் இந்த தொடரிலிருந்து நாங்கள் எடுத்துக்கொள்வோம். இனி நாங்கள் தவறிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவோம். என தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.