டெல்லி: எல்லை தாண்டி வந்த ரோஹிங்கியாக அகதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தர வேண்டுமா? என காணாமல் போன் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் மாயமான 5 ரோஹிங்கியா அகதிகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபிதி, நமது நாட்டிலும் ஏழைகள் உள்ளனர். […]