நீக்கப்படும் கம்பீரின் செல்லப்பிள்ளை… உள்ளே வரும் ரிஷப் பண்ட் – இந்திய அணியில் வரும் மாற்றம்!

India vs South Africa 3rd ODI Playing XI Changes: தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 2 டெஸ்ட், 3 ஓடிஐ, 5 டி20ஐ போட்டிகளில் இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதுகின்றன.

Add Zee News as a Preferred Source

IND vs SA: ஆதிக்கம் செலுத்தும் டெம்பா பவுமா

ஏற்கெனவே டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்த நிலையில், ஓடிஐ தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்திருக்கும் வேளையில் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது. டெம்பா பவுமா இந்த சுற்றுப்பயணத்தில் கேப்டனாக செயல்பட்டு ஒரு போட்டியை கூட இழக்கவில்லை. தென்னாப்பிரிக்கா தோற்ற முதல் ஒருநாள் போட்டியில் பவுமா விளையாடவில்லை, மார்க்ரம் கேப்டனாக செயல்பட்டார். டி20ஐ தொடரில் தென்னாப்பிரிக்காவை மார்க்ரம் தலைமை தாங்க இருக்கும் சூழலில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இந்திய ஸ்குவாட் நேற்று அறிவிக்கப்பட்டது.

IND vs SA 3rd ODI: தொடரை தீர்மானிக்கும் 3வது ஓடிஐ 

இந்தச் சூழலில், ஓடிஐ தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை மறுதினம் (டிசம்பர் 6) அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. மூன்றாவது போட்டியை பொருத்தவரை நிச்சயம் இரு தரப்பிலும் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இரு அணிகளும் சரியான காம்பினேஷனுடம் வர வாய்ப்புள்ளது.

IND vs SA 3rd ODI: தென்னாப்பிரிக்க அணியின் மாற்றங்கள்

தென்னாப்பிரிக்காவின் பிளேயிங் லெவன் சிறப்பாக இருந்தாலும், நாந்த்ரே பர்கர் மற்றும் டோனி டி  ஸோர்ஸி ஆகியோருக்கு நேற்றைய போட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால், இவர்களுக்கு பதில் ஓட்னீல் பார்ட்மேன், ரியான் ரிக்கல்டன் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் முதல் போட்டியில் விளையாடியிருந்தாலும் டெம்பா பவுமா மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோருக்கு பதில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இவர்களுக்கு 3வது போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளது.

IND vs SA 3rd ODI: இந்திய அணியின் ஒரே ஒரு மாற்றம்

இந்திய அணியை பொருத்தவரை ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ரிஷப் பண்ட் கொண்டுவரப்படலாம் என கூறப்படுகிறது. இதன்மூலம் இந்திய மிடில் ஆர்டர் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இருப் போட்டிகளிலும் 349, 358 ரன்களை குவித்தாலும் பினிஷிங் என்பது பிரச்னையாகவே உள்ளது. கேஎல் ராகுல் நல்ல பார்மில் இருந்தாலும் மறுமுனையில் அவரை போல் பவுண்டரிகளை குவிக்கக் கூடிய வீரர் இல்லாமல் திணற வேண்டியதாகி உள்ளது. ஜடேஜா பேட்டிங்கில் ஓரளவுதான் பங்களிப்பார், ஆனால் அவரின் பந்துவீச்சு மிக முக்கியமானது.

IND vs SA 3rd ODI:  ஏன் ரிஷப் பண்ட்…?

மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. 2 போட்டிகளில் 7 ஓவர்களை வீசி விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை, பேட்டிங்கிலும் இரண்டு போட்டிகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். கம்பீருக்கு வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் மிக பிடித்தமான ஒன்று என கூறப்படும் வேளையில் அவருக்கு ஓடிஐ அணியில் தற்போதைக்கு இடமில்லை. 

எனவே இவருக்கு பதில் ஒரு முக்கிய பிரதான பேட்டரை களமிறக்கலாம். அந்த வகையில், தற்போதைய ஸ்குவாடில் நம்பர் 5, நம்பர் 6 இடத்திற்கு பொருத்தமானவராக ரிஷப் பண்ட் காணப்படுகிறார். மிடில் ஓவர்களிலும், கடைசி கட்டத்திலும் தாக்குப்பிடித்து பவுண்டரிகளை குவிக்க அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை. எனவே, கடைசி ஓடிஐ போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ரிஷப் பண்ட் வருவார்.

IND vs SA 3rd ODI: பிரசித் கிருஷ்ணா இருப்பாரா?

பிரசித் கிருஷ்ணாவை நீக்க வேண்டும் என குரல்கள் வந்தாலும் அவரை நீக்குவது எளிதல்ல. நிதிஷ் குமார் ரெட்டியை எடுக்கலாம் என்றாலும் அவரால் ஹர்திக் பாண்டியா அளவிற்கு பந்துவீச்சில் பங்களிக்க இயலுமா என்பது சந்தேகம்தான். எனவே, பிரசித் கிருஷ்ணா தொடர்வார். 

மேலும் படிக்க | IND vs SA: டி20 அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட வீரர்! இனி வாய்ப்பு கிடைக்காது!

மேலும் படிக்க | ருதுராஜ் சதத்தால் இந்திய அணியில் இடம் உறுதி – ஆனால் இந்த 3 வீரர்களுக்கு ஆபத்து…!

மேலும் படிக்க | விராட் கோலியின் புதிய சாதனை! ஒட்டுமொத்த சதங்கள் எத்தனை தெரியுமா?

 

 

 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.