“திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" – ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்

மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.

மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டும் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம்.

இதுவரைக்கும் 4,300 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 வளர்ச்சிப் பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இப்போது 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான 358 வளர்ச்சிப் பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு” என்று குறிப்பிட்டு, “ (1) வைகை ஆற்றின் வடகரையில் விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.

(2) மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்கு வாசல், எஸ்.எஸ். காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் பழைய பாதாள சாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

(3) உத்தங்குடி உபரிநீர் கால்வாய், 7 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர் கட்டப்படும்.

(4) மேலூர் வட்டத்தில் உள்ள கேசம்பட்டி கிராமம், பெரியகண்மாய் நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கால்வாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். அதோடு, மேலூர் வட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

(5) மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கக்கூடிய கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கிற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

(6) 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்” என்று அறிவிப்புகளைப் பட்டியலிட்டார்.

இந்த நிலையில், ஸ்டாலினின் பேச்சுக்கு தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

தமிழிசை சௌந்தராஜன்
தமிழிசை சௌந்தராஜன்

தமிழிசை சௌந்தராஜன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “1. இன்று மதுரையில் கட்டிய மேம்பாலங்களை பட்டியலிட்டீர்கள். அது அடிப்படைக் கட்டமைப்பு. ஆனால் ஐந்து முறை ஆட்சியில் நீங்கள் மதுரைக்கு என்ன பெரிய தொழிற்சாலை கொண்டு வந்தீர்கள்?

2. இன்று மெட்ரோ ரயிலுக்கு சரியான கட்டமைப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்காமல், நிர்வாக ரீதியாக ரீதியாக மறுக்கப்பட்டதை மத்திய அரசு பாராபட்சமாக மறுக்கிறது என்று சொல்கிறீர்களே, உங்கள் சகோதரரே மதுரையில் அரசியல் செய்தவர் மத்தியில் அமைச்சராக இருந்தார். அப்பொழுது ஏன் மெட்ரோ ரயில் பற்றியும் சிந்திக்கவில்லை, மதுரை எய்ம்ஸ் பற்றியும் சிந்திக்கவில்லை, நீங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றபோது உடனே அனுமதி பெற்று இவை எல்லாம் நீங்கள் நிறைவு செய்து இருக்கலாமே.

3. இந்த பாசக்கார மதுரை அஞ்சா நெஞ்சாகர்களினால் அரசியல் செய்யப்பட்டபோது மதுரை எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டது என்பது மதுரை மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

4. மத்திய அரசு இளைஞர்களைப் பக்கோடா வைக்க சொன்னது என்று அப்பட்டமான பொய் சொல்கிறீர்கள். இன்று ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா என்று உலகிலேயே அதிக தொழில் முனைவோர்கள் இளைஞர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதும், குறிப்பாக முத்ரா வங்கி என்று தொழில் தொடங்க கடன் கொடுக்கப்பட்டதில் அதில் தமிழகத்தில் உள்ள பெண்களும் பட்டியலின சகோதர சகோதரிகளும் தான் அதிகம் பலன் அடைந்திருக்கிறார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. ஆக மத்திய அரசு பெண்களை உதவி பெறுபவர்களாக இல்லாமல் உதவி தருபவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழிசை சௌந்தராஜன்
தமிழிசை சௌந்தராஜன்

5. குடமுழுக்கு செய்ததை பெருமையாக சொல்கிறீர்கள். அந்தக் குடும்பத்துக்கான அத்தனை வருமானமும் அந்த கோயில்கள்தான் தருகின்றன. ஆனால், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடமுழுக்கு விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அதே நேரங்களில் இப்தார் விருந்துகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள், கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். ஆக வேற்றுமை பார்ப்பது யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.

6. கடற்கரையில் கலைஞருக்கு பேனா வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் உயர்ந்து நிற்கும் விளக்கு தூணில் நீதிமன்றம் சொன்ன பின்பும் விளக்கேற்ற துணை நிற்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம். ஆக உரிமையை தட்டி கேட்டால் அவர்கள் மதவாதிகள் என்று முத்திரை குத்துகிறிர்கள். மதுரை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

7. மதுரை வைகை உங்கள் ஆட்சியில் குடிக்க கூட முடியாத அளவிற்கு மாசுபட்டு இருப்பதும், அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை இடம் பெற்றிருப்பதும் உங்கள் ஆட்சியில் தான்.

8. இன்று ராஜாஜி மருத்துவமனையில் 150 கோடி ரூபாயில் சிறப்பு சிகிச்சை கட்டடங்கள் மத்திய அரசின் உதவினால் கட்டப்பட்டிருக்கின்றன. தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகளோடு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு பெற்றது என்பதை மறந்து விட வேண்டாம்.

9. மதுரை மத்திய அரசினால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய 1,000 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டது.

10. உலகத் தரம் வாய்ந்த கல்வியை கொடுக்க வேண்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு மிகவும் நிர்வாக சீர்கேடினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்.

11. ஆக எது எப்படி இருந்தாலும், தங்களுக்கு மதுரையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை திருப்பரங்குன்ற முருகன் ஏற்படுத்தியிருக்கிறான் என்ற வகையில் மகிழ்ச்சி.

12. மதுரை மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று, திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தி இருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி” என்று



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.