மெஸ்ஸி வந்தது எதற்கு…? கோபத்தின் உச்சிக்கே சென்ற ரசிகர்கள் – கொல்கத்தாவில் களேபரம்!

Chaos In Kolkata Lionel Messi Event: இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள, கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக அறியப்படும் அர்ஜென்டினா வீரர் லியானல் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளார். முதலில், இன்று மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு வந்திறங்கினார். 

Add Zee News as a Preferred Source

இன்று கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் லியானல் மெஸ்ஸியின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முறையாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை என்றும், மக்கள் கூட்டத்தை அதிகாரிகள் முறையாக கையாளில்லை என்றும் மெஸ்ஸியை காண வந்த ரசிகர்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகினர். பார்வையாளர்கள் மைதானத்தில் இருந்த சேர்களை தூக்கி வீசுவது, பாட்டில்களை தூக்கி வீசுவது, கூடாரங்களை கிழித்தெறிவது, மெஸ்ஸியின் போஸ்டர்களை கிழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தங்களின் கோபத்தை வெளிக்காட்டினர். மைதானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் கூட அக்கூட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. 

மெஸ்ஸியை பார்க்க வேண்டும் என்பதற்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலான டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கி, நீண்ட தொலைவில் இருந்து வந்த பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியே ஏற்பட்டிருக்கிறது. பார்வையாளர்களால் மெஸ்ஸியை பார்க்கக் கூட முடியவில்லையாம். தமிழ்நாட்டில் இருந்து ரயில் பிடித்து மெஸ்ஸியை பார்க்கச் சென்றவர்களுக்கு அங்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. இதனால் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக ரசிகர்கள் கோபமடைந்திருக்கிறார்கள்.

#WATCH | Kolkata, West Bengal: Angry fans resort to vandalism at the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event.

Star footballer Lionel Messi has left the Salt Lake Stadium in Kolkata.

A fan of star footballer Lionel Messi said, “Absolutely terrible… pic.twitter.com/TOf2KYeFt9

— ANI (@ANI) December 13, 2025

மேலும், மைதானத்தில் மெஸ்ஸி குறைவான நேரம் மட்டுமே இருந்தார் என்றும் அப்போது அவரை சுற்றி விஐபிகள், அரசியல்வாதிகள், விழா ஏற்பாட்டாளர்களே இருந்தார்கள் என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மெஸ்ஸி கால்பந்தை உதைக்கவோ அல்லது வேறு எதையுமே செய்யவில்லை என்றும் அவர்கள் கூறினர். 

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், அரசு ஆகிய இரண்டையும் பார்வையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். மெஸ்ஸியை பொதுமக்களிடம் இருந்து இந்தளவிற்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்றால், எதற்காக மக்களை அழைத்து விலை உயர்ந்த டிக்கெட்டுகளை விற்கிறீர்கள்? என்றும் அவர்கள் வாதிட்டனர்.

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.