சுப்மான் கில் கிடையாது… ஓபனிங்கில் CSK சேட்டன்… இந்திய அணியில் திடீர் மாற்றம்!

IND vs SA 5th T20I, Team India Playing XI: தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த நிலையில், அடுத்து ஓடிஐ தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. 

Add Zee News as a Preferred Source

தற்போது டி20ஐ தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியிலும் மூன்றாவது போட்டியிலும் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மட்டும் தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. நேற்று நடைபெற இருந்த 4வது போட்டி அதிகமான பனி மூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், இந்தியா 2-1 என்ற கணக்கில் டி20ஐ தொடரில் முன்னிலை வகிக்கிறது.

IND vs SA 5th T20I: முக்கியத்துவம் வாய்ந்த போட்டி 

அந்த வகையில், கடைசி மற்றும் 5வது டி20ஐ போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாளை இந்தியா வென்றால் 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும், தென்னாப்பிரிக்கா வென்றால் 2-2 என்ற கணக்கில் தொடர் சமன் அடையும். இதுமட்டுமின்றி, வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்களில், நரேந்திர மோடி மைதானமும் ஒன்று என்பதால் இரு அணிகளும் இந்த சூழலையும், ஆடுகளத்தையும் புரிந்துகொள்ள சிறப்பான வாய்ப்பை அளிக்கும். 

குறிப்பாக, ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நரேந்திர மோடி மைதானத்தில்தான் நடைபெற இருக்கிறது. லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி மூன்று போட்டிகளை இந்த மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்திய அணியும் ஒரே ஒரு லீக் போட்டியில் விளையாடுகிறது. மேலும், இரண்டு சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. எனவே, நாளைய ஆட்டம் டி20ஐ தொடருக்காக மட்டுமின்றி, டி20ஐ உலகக் கோப்பை தொடருக்காவும் முக்கியத்துவம் பெறுகிறது.

IND vs SA 5th T20I: சுப்மான் கில்லுக்கு பிடித்த மைதானம் 

மேலும் அகமதாபாத் மைதானம் என்றாலே தற்சமயம் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் சுப்மான் கில்லாகவே இருப்பார். ஐபிஎல் தொடரில் தற்போது குஜராத் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். அந்த அணியின் ஹோம் மைதானம், நரேந்திர மோடி மைதானம்தான். பேட்டிங்கிற்கு அதிக சாதகம் கொண்ட இந்த மைதானத்தில் அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் 1000 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். இந்த மைதானத்தில் 1000 ரன்களுக்கும் மேல் அடித்த முதல் வீரரும் அவர்தான். இங்கு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வரும் இவரின் பேட்டிங் சராசரி 63-க்கும் மேல் உள்ளது, அதிகபட்சமாக 129 ரன்களை அடித்திருக்கிறார். சர்வதேச போட்டிகளிலும் இஙகு சிறப்பான இன்னிங்ஸை விளையாடியிருக்கிறார்.

IND vs SA 5th T20I: சுப்மான் கில் விலகல்

சுப்மான் கில் சமீப காலமாக டி20ஐ அரங்கில் மோசமான பார்மில் இருக்கும் நிலையில், அகமதாபாத் மைதானம் அவருக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும், இதனால் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 5வது போட்டியில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிசிசிஐ மருத்துவக்குழு அவரது காயம் குறித்தோ அல்லது அவர் அடுத்து எப்போது விளையாடுவார் என்பது குறித்தோ எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை. லக்னோவில் திட்டமிடப்பட்ட 4வது போட்டியிலேயே அவர் விளையாடுவதில் சந்தேகம் இருந்த நிலையில், தற்போது 5வது போட்டியில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IND vs SA 5th T20I: சஞ்சு சாம்சனுக்கு செம வாய்ப்பு

நடப்பு தொடரில் முதல் மூன்று போட்டிகளில் மொத்தமே 32 ரன்களை மட்டுமே அவர் அடித்திருந்தார். துணை கேப்டனான அவர் கடந்த ஆசிய கோப்பை தொடரின் மூலம் டி20ஐ தொடருக்கு கம்பேக் கொடுத்தார். இதனால் ஓபனிங்கில் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டார், தற்போது பிளேயிங் லெவனிலேயே இடமில்லாமல் வெளியே தள்ளப்பட்டார். சுப்மான் கில்லின் காயம் காரணமாக சஞ்சு சாம்சன் நாளைய 5வது போட்டியில் ஓபனிங்கில் களமிறங்குவார் என கருதப்படுகிறது. பல போட்டிகளுக்கு பின் சஞ்சு சாம்சன் ஓபனிங்கில் களமிறங்குகிறார். ஒருவேளை நாளைய போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடிவிட்டால் அவரை வெளியே அனுப்பவுவது கடினமாக இருக்கும். அதேநேரத்தில், 3வது போட்டியை தவறவிட்ட ஜஸ்பிரித் பும்ரா 5வது போட்டிக்காக இந்திய அணியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, ஜித்தேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா. 

மேலும் படிக்க | இன்னும் 1 தொடர் தான்! அடுத்த 6 மாதத்திற்கு விராட், ரோஹித்தை பார்க்க முடியாது!

மேலும் படிக்க | விராட் கோலி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ.. “இப்படி செஞ்சிருக்க வேண்டாம்”.. ஷாக்!

மேலும் படிக்க | டாஸ் கூட போடாமல் இந்தியா – தென் ஆப்பிரிக்கா போட்டி ரத்து! ஏன் தெரியுமா?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.