ஒடிசா: வேலை வாங்கித்தருவதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த நபரிடம் தனக்கு டேட்டா எண்டரி வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து, வேலை குறித்து ஆலோசனை நடத்த தனது வீட்டிற்கு வருமாறு அந்த நபர் சிறுமியிடம் கூறியுள்ளார். இதை நம்பி கடந்த வியாழக்கிழமை மதியம் அந்த நபரின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அந்த நபர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் , சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.