சென்னை: தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நூலகங்களையும் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். அதன்படி, 60 அரசுப் பள்ளிகளில் ரூ.96.49 கோடியில் 392 வகுப்பறை கட்டடங்கள், 4 ஆய்வகங்கள் உள்ளிட்டவை திறந்த வைக்கப்பட்டுஉள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 68 […]