சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம் என தவெகவினருக்கு அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றும் கல்லா கட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் […]