நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, மற்றவர்கள் வழக்கில் வெற்றி பெற்றதை பார்த்து, “எங்களுக்கும் அதே நிவாரணம் வேண்டும்” என்று கேட்பது உரிமையாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, “பல வருடங்கள் கழித்து, மற்றவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை மட்டும் காரணமாகக் கொண்டு, அதே நன்மையை கோர முடியாது” என்று கூறியது. இந்த வழக்கில், மனுதாரர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற தீர்ப்பை, பாம்பே […]