"வெற்றியாளர்களை விட பங்கேற்பாளர்கள் தான் முக்கியம்; நரேஷ் ஐயர் கூட.!"- ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் சில பேட்டிகளை அளித்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தோற்பவர்களுக்கும் வாய்பளிப்பது குறித்து பேசியிருக்கிறார்.

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன்.

நரேஷ் ஐயர்
நரேஷ் ஐயர்

சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள். எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும்.

நரேஷ் ஐயர் கூட அப்படித்தான், 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால் அவரின் குரலில் இருந்த தரம் எனக்கு பிடித்திருந்தது.

அவரை அழைத்து ‘நீ தோற்றுவிட்டாய், ஆனால் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். எனக்கு ட்ராக் பாட கிளம்பி சென்னை வா’ என்றேன்.

அவருக்கு முதல் பாடலிலேயே (Roobaroo Rang De Basanti) தேசிய விருது கிடைத்தது” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.