மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த மதுரை கலெக்டர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதே, முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதற்கு சமமானது என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையில், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டும், அரசு அதனை நிறைவேற்றவில்லை. இதனைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று […]