சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.4.2025 அன்று சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் சென்னையில் கார்ல் மார்க்ஸ்சுக்கு புதிதாக உருவச்சிலை நிறுவப்படும் என அறிவித்தார். […]