சென்னை: தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9ந்தேதி) தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நவம்பர் 15, 2025 அன்று, சென்னை கலைவாணர் அரங்கில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் சிறப்பான திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது முன்னோடித் திட்டமாக, சென்னையில் 31,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு மற்றும் […]