TNPSC: `இந்த தேதியில் நடக்கும்' – ரத்தான குரூப் 2, 2A தேர்வுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது.

தேர்வு ஒத்திவைப்பால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அலட்சியச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை என இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

TNPSC
TNPSC

இந்நிலையில் குரூப் 2, 2A தேர்வு ரத்து குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

“ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வரும் 28ஆம் தேதிக்குள் தேர்வர்களுக்கு பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.